நீரே என் தரிசனமாயிரும்

 


1. நீரே என் தரிசனமாயிரும்,
நீரல்லால் வேறெல்லாம் மறையட்டும்;
எப்போதும் என் தியானமாயிரும்,
எந்நிலையிலும் என் கண்முன் இரும்.


2. என் வாக்கும், என் ஞானமுமாயிரும்,
என்னோடிரும், நான் உம்மோடிருப்பேன்,
என் தந்தையாய், நான் உம் மகனாய்,
என் சொந்தமாயிரும், நான் உம் சொந்தம்.


3. என் கேடகமாய், என் வாளாய் இரும்,
என் தஞ்சமாய், என் கோட்டையாய் இரும்,
என் மேன்மையாய், பூரிப்பாய் இரும்,
என்னை உயா;த்தும் விண்ணோனாய் வாழ.


4. நான் வேண்டும் நன்மை எல்லாமாய் இரும்,
வான் பூவில் நீர் என் வேந்தராய் இரும்,
என் நெஞ்சின் மா நேசமாயிரும்,
நீரே, நீரல்லால் வேறாரும் மேவேன்.


5. பூவின் செல்வங்கள், வீண் புகழ் வேண்டேன்,
நான் நாடும் சொத்தாய் என்றென்றும் இரும்,
என் முதல் தேடலாய் நீர் இரும்,
நான் தேடும் பொக்கிஷமாய் நீர் இரும்.


6. உம் அன்பால் என்னை நீர் முற்றும் கொள்ளும்,
உம் அன்பை வெள்ளம்போல் என்னில் ஊற்றும்,
என்ன நேர்ந்தாலும் அன்பின் தேவா,
என் நெஞ்சின் தரிசனமாய் இரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *